வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது

வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு வரவு-செலவுத் திட்ட உரை ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையின் 76ஆவது வரவு-செலவுத் திட்டம் இதுவாகும்.

அத்துடன், இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத் திட்டமாகும்.

2022ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், கடந்த ஒக்டோபர் 7ம் திகதி நிதி அமைச்சரினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்ட விவாதம் நாளை (13) ஆரம்பமாகவுள்ளது.

நவம்பர் 13 ஆம் திகதி சனிக்கிழமை முதல் நவம்பர் 22 ஆம் திகதி திங்கட்கிழமை வரை, 07 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

அதனையடுத்து, எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

நவம்பர் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல், குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளதோடு சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக டிசம்பர் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை 16 நாட்கள் விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image