காணாமல்போயிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

காணாமல்போயிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் காணாமல்போயிருந்த நிலையில்இ இரண்டு நாட்களின் பின்னர் நேற்று நவாலியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது-51) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணி தொடக்கம் அவரைக் காணவில்லை என குடும்பத்தினர் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாள்களின் பின்னர் அவர் நவாலிப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

development_officer.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image