ரிசாத் பதியுதீனின் மனைவி மற்றும் மனைவியின் தந்தை உட்பட மூவர் கைது

ரிசாத் பதியுதீனின் மனைவி மற்றும் மனைவியின் தந்தை உட்பட மூவர் கைது

வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய 16 வயதான சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

என பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மனைவி (46), மனைவியின் தந்தை (70) மற்றும் சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் மற்றும் பொரளை பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு என்பன குறித்த நேற்று மூவரிடமும் பல மணிநேரம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image