2,000 ரூபா கொடுப்பனவு யாருக்கு? வெளியானது சுற்றுநிருபம்

2,000 ரூபா கொடுப்பனவு யாருக்கு? வெளியானது சுற்றுநிருபம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள நிலையில் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

பொருளாதார புனர்வாழ்வு மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் ஊடாக குறித்த சுற்றுநிருபம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் எந்தவொரு கொடுப்பனவும் இதுவரை பெறாத குடும்பங்களை சேர்ந்தவர்கள் இதற்காக தகுதி பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், சமூர்த்தி, முதியோர் கொடுப்பனவுகளை பெறுவோர் விசேட தேவையுடையோர் ஆகிய அரசாங்க கொடுப்பனவுகளை பெறுவோருக்கு இந்த நிவாரணம் வழங்கப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிவாரண கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேவையான மேலதிக கோட்பாடுகள் திறைசேறியினால் சகல மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச ஒருங்கிணைப்பு மற்றும் கிராமிய குழுக்களின் உதவியுடன் கிராம சேவையாளர் மட்டத்தில் சுகாதார நடைமுறையுடன் குறித்த நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும் என பொருளாதார புணர்வாழ்வு மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image