10,000 இலங்கையர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்புக்கான ஒப்பந்தம் ஒக்டோபரில்

10,000 இலங்கையர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்புக்கான ஒப்பந்தம் ஒக்டோபரில்

10,000 இலங்கை புலம்பெயர் பணியாளர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

10,000 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, மலேசியாவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக, அடுத்த மாத முதல் வாரத்தில் மலேசிய மனிதவள அமைச்சர் எம்.சரவணன் இலங்கை வரவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். 

10,000 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்புகளை வழங்க அந்த நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், 10,000 தொழிலாளர்களுக்கான ஒப்பந்த காலம், சம்பளம் உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளும், ஒப்பந்தம் கையொப்பமிடப்படும் சந்தர்ப்பத்தில் முடிவு செய்யப்பட உள்ளன.

தமது கோரிக்கையின்படி, இலங்கைக்கான மலேசியத் தூதர் டான் யாங் தாய், தம்மை சந்தித்து, மலேசியாவில் 10, 000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image