ரஷ்ய ஆக்கிரமிப்பால் இடம்பெயர்ந்துள்ள மூன்றில் ஒரு பகுதி உக்ரேன் குழந்தைகள்!

ரஷ்ய ஆக்கிரமிப்பால் இடம்பெயர்ந்துள்ள மூன்றில் ஒரு பகுதி உக்ரேன் குழந்தைகள்!

உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்திலிருந்து சுமார் 6 வார காலத்திற்குள் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் தமது வீடுகளை விட்டு வௌியேறியுள்ளனர் என்று ஐ.நாவின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் (UNICEF) தெரிவித்துள்ளது.


உக்ரைனில் இருந்து திரும்பிய யுனிசெப்பின் அவசரகால திட்ட இயக்குனர் மேனுவல் ஃபோன்டைன் கருத்து வௌியிடுகையில், உக்ரேனில் 7.5 மில்லியன் குழந்தைகளில் 4.8 மில்லியன் பேர் மிகக் குறுகிய காலத்தில் இடம்பெயர்ந்திருப்பது, 31 வருட மனிதாபிமானப் பணியில் இதுவரை பார்க்காத ஒன்று என்று” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தங்கள் வீடுகளில் தங்கியிருப்பதாக மதிப்பிடப்பட்ட 3.2 மில்லியன் குழந்தைகளில், ஏறக்குறைய பாதி பேர் போதிய உணவு இல்லாமல் ஆபத்தில் உள்ளனர்” என்று ஃபோன்டைன் ஐ.நா. பாதுகாப்பு சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் உக்ரைனில் ஐ.நா தூதர் செர்ஜி கிஸ்லிட்சியா, ரஷ்யா 1,21,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை உக்ரேனில் இருந்து அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறி, தத்தெடுப்பு நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் விரைவுபடுத்துவதற்கும் ஒரு மசோதாவைத் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை “எந்த ஆதாரமும் இல்லை”, ஆனால் UNICEF இந்த விஷயத்தை விசாரிக்கும் என்று ஃபோன்டைன் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image