ஓய்வு பெற்ற பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் மீள சேவைக்கு

ஓய்வு பெற்ற பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் மீள சேவைக்கு

ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர்களை மீள சேவைக்கு அழைக்க சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டச் செயலக அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கொவிட் தடுப்பு விசேட குழுவின் சந்திப்பின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

கேகாலை மாவட்டத்தில் தற்போது 60 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையாற்றுகின்றனர். ஒரு அதிகாரி 10 கிராமங்களுக்கு சேவை வழங்கவேண்டிய நிலைமை காணப்படுகிறது. இதனால் பாரிய பிரச்சினைக்கு அவ்வதிகாரிகள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்று கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குமார் விக்கிரமசிங்க இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image