4 பெண்கள் உட்பட 11 தோட்டத் தொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

4 பெண்கள் உட்பட 11 தோட்டத் தொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் தலவாக்கலை கட்டுக்களை தோட்ட தொழிலாளர்கள் 11 பேரையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் தலவாக்கலை கட்டுக்களை தோட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 28.09.2021 அன்று தோட்ட சேவையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பு வரை சென்ற நிலையில் அதில் படுகாயம் அடைந்த தோட்ட சேவையாளர்கள் இருவரும் தோட்டத் தொழிலாளர்கள் இருவரும் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தோட்ட உதவி முகாமையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் தாக்குதலை நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து புதன்கிழமை (29) காலை தோட்ட சேவையாளர்கள் தலவாக்கலை தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் தலவாக்கலை தோட்ட பிரிவின் தொழிலாளர்களும் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டதுடன் பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில்லேயே தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் நபர்கள் 11 பேர் (ஆண் - 7  பெண் - 4) 29 அன்று மாலை கைது செய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவர்களை முதலாம் திகதி வரை விளக்கமறியலில் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த முதலாம் திகதி இந்த 11 பேரும் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை தொடரந்தும் செவ்வாய்கிழமை (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image