தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் 1000 ரூபா வேதனம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் 1000 ரூபா வேதனம்

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக விரைவில் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (12) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் அதிகரிக்கப்படும் நாளாந்த வேதனத்தை தோட்டக் கம்பனிகளே வழங்க வேண்டும். தற்போது அதற்கான தொழில் அமைச்சு, தொழிற்சங்கங்கள் என்பன இணைந்து தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றன. விரைவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தொழில் அமைச்சு அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image