அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், பட்டதாரி பயிலுனர்களுக்கும் விசேட அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், பட்டதாரி பயிலுனர்களுக்கும் விசேட அறிவித்தல்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரி பயிலுனர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
 
 2018 / 2019 ஆம் ஆண்டுகள் உட்பட அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் இல்லாது செய்யப்பட்டுள்ள சேவையை நிரந்தரமாக்கி அவர்களை பணியில் உள்ளீர்ப்பதற்கும்.
 
பணியாளர் பட்டியல், பதவி உயர்வு முறைமை மற்றும் இடமாற்றம் முறைமை உள்ளிட்ட சேவை யாப்பை வென்றெடுப்பதற்கும்,
 
அனைத்து பயிலுனர்களுக்கும் செப்டம்பர் மூன்றாம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்றும்
 
2016ஆம் ஆண்டின் பின்னர் இல்லாத செய்யப்பட்டுள்ள ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்வதற்குமான ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 20 வரையான போராட்டத்தில் ஒன்றிணையுமாறு  ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.
 
அதிகாரிகளிடம் கையளிக்கப்பட உள்ள மகஜரில் கையொப்பம் இடுவதற்கு அந்த சங்கம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image