வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்காக முகவர்களுக்கோ தனிநபர்களுக்கோ பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னதாக அந்த முகவரகம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகம் மீண்டும் அறிவித்துள்ளது.



அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருப்பின், குறித்த முகவரகம் தொழில் கோரல் உத்தரவைப் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ளுமாறு அந்த பணியகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

1989 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியும் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாகவும் குறித்த தகவல்களை, பெற்றுக் கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image