இஸ்ரேல் எல்லையில் கைதுசெய்யப்பட்ட இலங்கைப் பெண்கள் தொடர்பில் வௌியான தகவல்

இஸ்ரேல் எல்லையில் கைதுசெய்யப்பட்ட இலங்கைப் பெண்கள் தொடர்பில் வௌியான தகவல்

இஸ்ரேல் எல்லையில் கைதுசெய்யப்பட்ட இலங்கை பெண்கள் இருவரும் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்பட உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்தபோது, இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த இரண்டு பெண்களும் இஸ்ரேல் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த இரண்டு இலங்கை பெண்களும் 44 மற்றும் 50 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image