காஸாவை அண்மித்த பகுதியில் இருந்து 13 இலங்கையர்கள் வௌியேற்றம்

காஸாவை அண்மித்த பகுதியில் இருந்து 13 இலங்கையர்கள் வௌியேற்றம்

காஸாவை அண்மித்த பகுதியில் இருந்து 13 இலங்கையர்கள் வௌியேற்றப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். 

காஸாவை அண்மித்த பகுதியில் சுமார் 20 இலங்கையர்கள் தொழில் புரிந்து வந்த நிலையில்,  13 பேரும் வௌியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் 7 பேரை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக காணாமல் போன இலங்கையர்கள் இருவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே இடம்பெறும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image