கத்தாரில் வாகன ஓட்டுநர்கள் கைபேசி பாவிப்பதை கண்காணிக்க புதிய கமராக்கள்

கத்தாரில் வாகன ஓட்டுநர்கள் கைபேசி பாவிப்பதை கண்காணிக்க புதிய கமராக்கள்

கத்தார் சாலைகளை பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில், வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவது, சீட்பெல்ட் அணியாமை போன்ற மீறல்களை புதிய வகை கமராக்கள் (ரேடார்) மூலமாக  கண்காணிக்கத் தொடங்கவுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சின் போக்குவரத்து பொது இயக்குநரகம் அதன் சமூக ஊடக தளங்களில் இதனை அறிவித்துள்ளது. இந்த  வகை கேமராக்கள், தானியங்கு கண்காணிப்பு வகையைச் சேர்ந்தனை என்பதாக MOI தெரிவித்துள்ளது.

 

“நேற்று (செப்டம்பர், 03, 2023 முதல், போக்குவரத்து பொது இயக்குநரகம், சீட் பெல்ட் அணியாமை மற்றும் வாகனம் ஓட்டும்போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவது போன்ற போக்குவரத்து விதிமீறல்களுக்கு தானியங்கி கண்காணிப்பை செயல்படுத்தும்” என்று உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் 24/7 அமலில் இருக்கும். பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறு வாகன ஓட்டுநர்களுக்கு அமைச்சு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம் - கத்தார் தமிழ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image