17 இலங்கையர்கள் ரஷ்யாவிலுள்ள இராணுவ முகாமிலிருந்து தப்பி நாடு திரும்பினர்

17 இலங்கையர்கள் ரஷ்யாவிலுள்ள இராணுவ முகாமிலிருந்து தப்பி நாடு திரும்பினர்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கி ரஷ்யாவிலுள்ள இராணுவ முகாமில் பணியமர்த்தப்பட்டிருந்த 17 இலங்கையர்கள் குறித்த முகாம்களில் இருந்து தப்பிய நிலையில் நாடு திரும்பியுள்ளனர்.


அத்துடன், 50க்கும் மேற்பட்ட மேலும் பல இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்பிவர முடியாமல் ரஷ்ய இராணுவ முகாம்களில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான யுத்தத்தின் மத்தியில், அரசாங்கத்தின் தலையீடு இன்றி ரஷ்யாவுக்கு இராணுவ சேவைக்காக பாதுகாப்புப் படையினர் மற்றும் ஏனைய பொதுமக்களை அனுப்பும் மோசடி தொடர்பான விடயங்கள் குறித்து கடந்த மாதம் 4 ஆம் திகதி வெளிக்கொண்டு வரப்பட்டிருந்தது.

மூலம் - சூரியன் எப் எம் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image