ஓமான் கடலில் கப்பல் கவிழ்ந்ததில் இலங்கையர்கள் உள்ளிட்ட 16 பேர் காணாமல் போயுள்ளனர்

ஓமான் கடலில் கப்பல் கவிழ்ந்ததில் இலங்கையர்கள் உள்ளிட்ட 16 பேர் காணாமல் போயுள்ளனர்

கொமோரஸ் நாட்டு கொடியுடன் ஓமான் கடற்பிராந்தியத்தில் பயணித்த எண்ணெய் கப்பல் மூழ்கியதில் 3 இலங்கையர்கள் உள்ளிட்ட 16 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யேமன் துறைமுகமான ஏடனை நோக்கி பயணித்த கப்பல்இ ஓமானின் முக்கிய தொழில்துறை துறைமுகமான டுக்மில் பகுதியில் வைத்து கவிழ்ந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கப்பலில் பயணித்த 16 பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் 3 இலங்கையர்களும் 13 இந்தியர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஓமான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Image

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image