குவைத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 10,615 இலங்கையர்கள்!

குவைத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 10,615 இலங்கையர்கள்!
குவைத்தில் சட்டவிரோதமாக மற்றும் விசா காலத்தை மீறித் தங்கியிருந்த 10,615 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
2024ஆம் ஆண்டுக்காக குவைத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது குறித்த அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

குவைத் வெளிவிவகார அமைச்சும் அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து நடத்திய கலந்துரையாடலின் பிரகாரம் கடந்த மார்ச் 17 ஆம் திகதி முதல் ஜூன் ஆம் திகதி 30 வரை இந்த பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில், சில அடிப்படை ஆவணங்களின் அடிப்படையில் மாத்திரம் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற தற்காலிகக் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image