அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் பதில்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் பதில்

அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமில்லாமல் இருக்கும்.

எந்த அரசாங்கமாக இருந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளின் அடிப்படையிலான கருத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் இந்த சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மற்றும் அது அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றுள்ளதென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, அரச ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்புக்கு எதிரான பிரசாரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

சமூகத்தில் தவறாக சித்தரிக்கப்படுமாயின் அதனைத் திருத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் அமைச்சரவைப் பேச்சாளர் என்ற வகையில் எனக்கு உண்டு.

அமைச்சரவைப் பத்திரங்கள் இரகசியமானவை. அவை வெளியே கொண்டுசெல்லப்படுவதில்லை. அவற்றின் பிரதிகள் அமைச்சின் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நான் அமைச்சரவை பேச்சாளராக பணியாற்றுகிறேன். அந்தச் செயற்பாடுகளில் ஊடகவியலாளர்களும் பொறுப்புடன் செயற்பட்டனர். என்னால் தெரிவிக்கப்பட்ட செய்தி அரசியலமைப்பின்படி சிங்கள மற்றும் தமிழ் ஊடகங்களில் வெளிவருகின்றன.

அவை ஊடக நிறுவனங்களுக்கும் அனுப்பப்படுகிறன. அவை கலாநிதி பந்துல குணவர்தனவின் அறிக்கைகள் அல்ல. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளையே நான் அறிவிப்பேன். நீண்டகாலமாக அடிப்படைச் சம்பளம் மாற்றியமைக்கப்படாமையால், அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டு, 25,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக மூன்று வருடங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்த முடிவுகளை நான் தெரிவித்த பிறகு, ஊடக நிறுவனங்கள் அதில் ஒரு பகுதியை மட்டுமே சமுகமயமாக்கியுள்ளன. அங்கு பலர் அடிப்படை சம்பளம் பற்றி குறிப்பிடாமல் ரூ.25,000 உயர்வு பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.

ஆட்சி செய்வதும் அரசியல் செய்வதும் இரண்டு. தற்போது நிதி அமைச்சு வரவு செலவு திட்டத்தை தயாரித்து வருகிறது. அதில் உள்ளடக்குவதற்கு அமைச்சரவை அறிவிப்பு சரியாக இருக்க வேண்டும். அனைத்து அரச ஊழியர்களுக்கும் மூன்று வருடங்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவு திருத்தம் இன்றி வழங்கப்படும்.

இரண்டாவதாக, அடிப்படை சம்பளம் திருத்தப்படாவிட்டால், நூற்றுக்கு 255.35 சதவீதம் அதிகரிக்கும். மிகக் குறைந்த வருமானம் பெறுபவர்கள் குறைந்தபட்சம் மாதம் 55,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் பெறுவார்கள்.

சர்வதேச நாணய நிதியம் 2027 ஆம் ஆண்டு வரை வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை நிதி ஒதுக்கீட்டின் அளவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான ஒப்பந்த ஆவணங்கள் கையெழுத்தாகியுள்ளன. - என்றார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image