அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குதல்

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குதல்

2025 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்குள்இ அரச சேவையின் சாத்தியமான அனைத்துப் பகுதிகளிலும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தன்னியக்கமயமாக்கல் ஊடாக இலத்திரனியல் கட்டமைப்பு; மூலம் அரச நிர்வாக முறைமையை (E- Governance) அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

என்று அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் மாதாந்த பங்களிப்புடன் மிகவும் கவர்ச்சிகரமான சலுகைகளை அனுபவிக்கும் வகையில்இ 2025 ஜனவரி முதல் மருத்துவக் காப்புறுதி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image