1,700 ரூபா சம்பள உயர்வு வர்த்தமானி மீண்டும் வெளியானது

1,700 ரூபா சம்பள உயர்வு வர்த்தமானி மீண்டும் வெளியானது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படிm நாளாந்த அடிப்படை சம்பளமாக 1இ350 ரூபாவும்இ உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவுமாக 1இ700 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி தொடர்பான ஆட்சேபனைகளை எதிர்வரும் 28ஆம் திகதி மதியம் 12 மணி வரை சமர்ப்பிக்க முடியும் என அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள நிர்ணய சபையில் நேற்று முன்தினம் எட்டப்பட்ட தீர்மானத்துக்கு அமைய தற்போது புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image