கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் மீண்டும் பணிப்புறக்கணிப்பு!

கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் மீண்டும் பணிப்புறக்கணிப்பு!
அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.
 
எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் கிராம உத்தியோகத்தர்கள் தங்களது அனைத்து சேவைகளிலிருந்தும் விலகியிருப்பார்கள் என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார். 
 
எவ்வாறாயினும் இந்த பணிப்புறக்கணிப்பு, தேர்தல் பணிகளை எந்தவகையிலும் பாதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கிராம உத்தியோகத்தர் சேவை யாப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image