இன்றும் தொடரும் அதிபர் - ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை

இன்றும் தொடரும் அதிபர் - ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை

நாடளாவிய ரீதியில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கம் இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

 
தமது போராட்டம் மீதான நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றும் நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
 
சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, சுகயீன விடுமுறையை பதிவு செய்த அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று(26)  கொழும்பு முன்னெடுத்த போராட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினமும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று தெரிவித்தார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image