நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை ​போராட்டத்திற்கு தயாராகும் இலங்கை ஆசிரியர் சங்கம்

நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை ​போராட்டத்திற்கு தயாராகும் இலங்கை ஆசிரியர் சங்கம்

எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஊதிய முரண்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கைக்கு சமாந்தரமாக எதிர்வரும் 12ஆம் திகதி கண்டனப் போராட்டத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image