எதிர்க்கட்சி தலைவரை சந்திக்கும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகள்

எதிர்க்கட்சி தலைவரை சந்திக்கும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகள்

தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இன்று(22) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்திக்கவுள்ளனர்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் தொடர்பில் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆட்சியாளர்கள் உரிய பதில் வழங்கவில்லையென பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று 21ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image