சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு

தமது கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்று (09) முதல் மாகாண மட்டத்தில் வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொருளாதார நீதியை நிறைவேற்றுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தாலும், இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றஞ்சுமத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய, வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

மாகாண ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற தொழிற்சங்க நடவடிக்கை

09.05.2024 - வட மத்திய மாகாணம்
13.05.2024 - மத்திய மாகாணம்
14.05.2024 - சப்ரகமுவ மாகாணம்
15.05.2024 - வடமேல் மாகாணம்
16.05.2024 - தென் மாகாணம்
20.05.2024 - ஊவா மாகாணம்
21.05.2024 - மேல் மாகாணம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image