சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான அமைச்சரவை முடிவு

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான அமைச்சரவை முடிவு

இலங்கையிலுள்ள ஒரேயொரு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் 1969 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளுக்கான உள்ளுர் கேள்வியின் 25% குறித்த சுத்திகரிப்பு நிலையத்தால் விநியோகிக்கப்படுகின்றது.

இச்சுத்திகரிப்பு நிலையத்தை காலத்தோடு தழுவியதாக மேம்படுத்தி, மேலும் 25 வருடங்கள் பயன்படுத்துவதற்காக குறிப்பிடத்தக்க முதலீடுகளை மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளதுடன், அதற்குத் தேவையான முதலீடு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் துறையினர் மூலம் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை வேறானதொரு அரச தொழில் முயற்சியாண்மையாக நிறுவுவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து வேறானதொரு அரச தொழில் முயற்சியாண்மையாக நிறுவுவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image