நாட்டில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்!

நாட்டில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்!

நாட்டில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகளவில் பதிவாகுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்படவுள்ள பாலியல் கல்வி தொடர்பில் நேற்று (6) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மைக்காலங்களில் பதிவான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நெருங்கிய உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 2022 ஆம் ஆண்டில் 1,618 முறைப்பாடுகளும், 2023 ஆம் ஆண்டில் 1,639 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, உரிய தெளிவுப்படுத்தல்கள் மூலம் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image