மத்திய மாகாண பாடசாலைகளில் இடம்பெறும் விழாக்களை வரையறுத்து சுற்றுநிருபம்

மத்திய மாகாண பாடசாலைகளில் இடம்பெறும் விழாக்களை வரையறுத்து சுற்றுநிருபம்

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளில் இடம்பெற்றுவரும் விழாக்களில் ஏழு விழாக்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேனகா ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட சுற்று நிருபத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் கூறுகையில்,

மத்திய மாகாண சபைக்கு உரித்தான பாடசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகளில் பல்வேறு விழாக்களை ஏற்பாடு செய்து, சில பாடசாலைகள் பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனால் மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இடம்பெற்றுவரும் நிகழ்வுகளில் ஏழு நிகழ்வுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சுற்று நிருபத்துக்கு அமைய முதலாவது தவணையில் 3 விழாக்களுக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளில் 4 விழாக்களுக்கும் அனுமதி வழங்கப்படுவதுடன் இதற்கு மேலதிகமாக ஏதாவது ஒரு விழா நடத்துவதாக இருந்தால் அது தொடர்பாக மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி பெறவேண்டும்.

முதலாம் தவணையில் புதிய பிள்ளைகளை அனுமதிக்கும் விழா, சுதந்திர தின விழா மற்றும் இல்ல விளையாட்டு விழா நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளின்போது கல்விச் சுற்றுலா, கலைவிழாக்கள், வர்ண நிகழ்வுகள் மற்றும் வருடாந்த பரிசளிப்பு விழா ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இசைக் கச்சேரி, ஆசிரிய கெளரவிப்பு உள்ளிட்ட பல்வேறு விழா நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களினால் வரையறை இன்றி பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடுவதாக  கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த சுற்று நிருபம் விடுக்கப்பட்டுள்ளது என்றார். 

மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image