வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம்: சி.ஐ.டீ விசாரணை ஆரம்பம்

வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம்: சி.ஐ.டீ விசாரணை ஆரம்பம்

வெலிக்கடை பொலிஸ் இருந்த நிலையில், உயிரிழந்த 42 வயதான வீட்டுப் பணிபாபெண்ணின் மரணம் தொடர்பான, விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, குற்றப் புலனாய்வு திணைக்களம், நீதிமன்றிற்கு அறியப்படுத்தியுள்ளது.



பதுளை தெமோதரை பகுதியைச் சேர்ந்த 42 வயதான் ஆர்.ராஜகுமாரி என்ற குறித்த பெண், கொழும்பில் வசிக்கும் நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய நிலையில், திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பாக அண்மையில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து சம்பவ தினத்தன்று, அவர், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் வைத்து, உடல்நலக் குறைவுக்கு உள்ளானதால், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸ் நடவடிக்கை எடுத்தது.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அவர் மரணித்திருந்ததாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில், அண்மையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது. அடுத்த மாதம் 2ஆம் திகதி, சம்பவம் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை, நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image