அரச ஊழியர்களுக்கு அமைச்சர் முன்வைத்துள்ள சம்பள உயர்வு

அரச ஊழியர்களுக்கு அமைச்சர் முன்வைத்துள்ள சம்பள உயர்வு

அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜா-எல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் 20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தி அரச ஊழியர்களின் அடுத்த மாத சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படவுள்ளது

கடந்த கால பொருளாதார நெருக்கடியை அடுத்து அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமல் உள்ளது. எனினும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும். அதனூடாக மக்களின் வருவாயை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்.

இந்தநிலையில் நாட்டு மக்களின் வருவாயை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image