அரச ஊழியர்களின் அடுத்த மாத சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படவுள்ளது

அரச ஊழியர்களின் அடுத்த மாத சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படவுள்ளது

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பன முன்கூட்டியே வழங்கப்படவுள்ளன.

சமுர்த்தி கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கான வேதனம் மற்றும் ஓய்வூதியம் என்பன ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்ல பகுதியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image