பரீட்சைகள் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கான அறிவித்தல்

பரீட்சைகள் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கான அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தாமதமாகுவதால், பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஏனைய பரீட்சைகளும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இரண்டாயிரம் ரூபா என்ற கொடுப்பனவு போதுமானதாக அமையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான நாளாந்த கட்டணம் மூவாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image