தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு

தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு

எதிர்வரும் 22, 23, 24ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, திட்டமிட்டபடி இன்றைய தினம் (15) தபால் மூல வாக்குசீட்டுகளை விநியோகிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிட அரச அச்சகம் மறுத்துள்ளதால், திட்டமிட்டபடி இன்று (15) முதல் தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க முடியாது என, கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

நேற்று (14) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image