ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவித்தல்

ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.


40 வயதுக்குட்பட்ட அனைத்து பட்டதாரி அரச ஊழியர்களும் விண்ணப்பங்களை நேரடியாக அனுப்பலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் உயர்தர வகுப்புகளில் காணப்படுவதால் இந்த பட்டதாரி ஆசிரியர்களை இனைத்துக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆட்சேர்ப்பினை தொடர்ந்து பாடசாலைகளில் எஞ்சியுள்ள மற்றும் உருவாகும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏனைய பட்டதாரிகளையும் இணைத்துக்கொள்ள மாகாண சபைகள் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image