ஆசிரியர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

ஆசிரியர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

நாளை (20) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், க.பொ.த சாதாரணதரப் பரீட்சை கடமைகளுக்குரிய பணிக்குழாமினர் முன்னர்போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும், முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை, இன்று தொடக்கம் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
 
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிக்கல் நிலை என்பனவற்றைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகளுக்காக, பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி மீள திறக்கப்படவுள்ளன.
 
இந்த நிலையில், பரீட்சைகள் திணைக்களம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image