ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? இறுதி முடிவு இன்று

ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? இறுதி முடிவு இன்று

நாட்டில் சுமார் ஒருமாத காலமாக அமுலிலல் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளது.

 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயலணியின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
 
இதன்போது குறித்த விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.
 
இதேநேரம், இன்றைய தினம் இடம்பெறவுள்ள கூட்டத்தில், பாடசாலைகளை மீளத் திறத்தல் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தல் என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
 
தடுப்பூசி செலுத்தப்படும் மாணவர்களின் வயதெல்லை குறித்தும் இதன்போது இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image