அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்க்கப்பட்டோருக்கு ஆசிரியர் நியமனம்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்க்கப்பட்டோருக்கு ஆசிரியர் நியமனம்
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பட்டதாரிகளை ஆட்சேர்க்கும்  யோசனை திட்டத்தின்கீழ் ஆட்சேர்க்கப்பட்டு  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பதவிகளில் சேவையாற்றும்
தேரர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான அறிவுறுத்தல் மத்திய மாகாண சபையினால் அனைத்து  வலைய பணிமனை பணிப்பாளர்களுக்கும் நேற்று (28) கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
குறித்த விடயத்திற்கு அமைப்பாக உங்களது வலயத்தில் தற்போது அபிவிருத்தி  உத்தியோகத்தர் பதவியி் சேவையாற்றும் பட்டதாரி தேரர்களை மத்திய மாகாணத்தில் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பதற்கான  அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்,  அவர்களின் கீழ் குறிப்பிடப்படுகின்ற ஆவணங்கள்  உறுதிப்படுத்தப்பட்ட  பிரதிகள் உங்களது பரிந்துரையுடன்  எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதிக்கு முன்னர் எனக்கு கிடைப்பதற்காக ஆவணசெய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
 
01.  பிறப்புச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
 
02. தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
 
03. உபசம்பதா  சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
 
04.  பட்டதாரி சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
 
பிரதான மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சார்பில், செயலாளர் கே.ஜி உபாலி ரணவக்கவினால் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image