கொழும்பு துறைமுக நகர சட்டமூலம்: உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம்: உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான, உயர்நீதிமன்றின் தீர்ப்பு நேற்று முன்தினம் தமக்கு கிடைத்ததாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றின் தீர்ப்பு எதிர்வரும் 18 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்டமூலம் தொடர்பில் நேற்று முன்மதினம் (05) நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட இருந்தது.

எனினும், உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், சட்டமூலம் மீதான விவாதத்தை, அடுத்துவரும் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் நடத்த நேற்று முன்தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், அதுகுறித்து அடுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், கடந்த மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, 19 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை, பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில், கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமாகி, 23ஆம் திகதி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image