தமிழ் - சிங்கள புது வருடம் முதல் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா

தமிழ் - சிங்கள புது வருடம் முதல் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா

எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு முதல் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டி மாநகர சபை மைதானத்தில் நேற்று (10) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

மேலும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் 24 இலட்சம் பேருக்கு அந்த நன்மைகள் கிடைக்கும்.

இந்த சிங்கள – தமிழ் புத்தாண்டில் அந்தக் அனைத்து குடும்பங்களுக்கும் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும், காணி அனுமதிப் பத்திரம் உள்ள அனைவருக்கும் நிரந்தர காணி உரித்து வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு சட்டபூர்வ உரிமைகள் வழங்கப்படும். இக்கட்டான காலங்கள் இருந்தபோதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கி, புரட்சியை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம். மேலும், விவசாய நவீனமயமயப்படுத்தி, 10 ஆண்டுகளில் ஏற்றுமதி மூலம் வருமானம் ஈட்ட எதிர்பார்க்கிறோம்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image