1,700 ரூபா சம்பளம் இல்லை - சம்பள நிர்ணய சபையில் முடிவு!

1,700 ரூபா சம்பளம் இல்லை - சம்பள நிர்ணய சபையில் முடிவு!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,350 ரூபாவை அடிப்படை சம்பளமாக மாத்திரம் வழங்க இன்றைய சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊக்குவிப்பு திறன் கொடுப்பனவாக 350 ரூபாய் வழங்கப்படமாட்டாது என்றும் மாறாக மேலதிகமாக எடுக்கப்படும் கொழுந்து கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்குவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

மேலும், மூன்று வருடங்களுக்கு சம்பள உயர்வு கோரப்பட மாட்டாது என்ற தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக இலங்கை செங்கொடி சங்கத்தின் செயலாளர் மேனகா துரைசிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image