ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரேனில் 137 பேர் பலி

ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரேனில் 137 பேர் பலி

ரஷ்ய படைகள் நேற்று மேற்கொண்ட தாக்குதல்களில், உக்ரேனில் இராணுவத்தினர், பொதுமக்கள் உட்பட 137 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு தெற்கு என மும்முனைகளில் இருந்து ரஷ்ய படைகள் தாக்குதவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரேன் தலைநகர் கிவ் முலiஎ உட்பட ஏனைய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தப்பிச் செல்ல முயற்சிப்பதாகவும், இதுவரையில் சுமார் ஒரு இலட்சம் பேர் வெளியேறியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதேநேரம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உக்ரேனில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image