நாட்டில் இரண்டாவது நாளாகவும் கொவிட்-19 தொற்றால் 150 இற்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (12) 155 கொவிட்-19 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 5,775 ஆக அதிகரித்துள்ளது.