ஓமானிலிருந்து நாடுதிரும்பிய இலங்கை பணிப்பெண்கள்

ஓமானிலிருந்து நாடுதிரும்பிய இலங்கை பணிப்பெண்கள்

ஓமான் - மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை பணிப்பெண்கள் 7 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

யூ.எல். 206 என்ற விமானத்தில் இன்று காலை நாட்டை வந்தடைந்த அவர்கள், வென்னப்புவ, திருகோணமலை, கிண்ணியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்களாவர்.

ஓமானிலுள்ள இலங்கை தூதுரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் 118 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் இலங்கைக்கு திரும்புவதற்காக மஸ்கட் விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

எனினும்,  அவர்களது ஆவணங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர்களில் நான்கு பேரால் நாடு திரும்பமுடியாமல் போன நிலையில், எஞ்சிய ஏழு பேர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image