மாலேயில் உள்ள கராஜ் ஒன்றில் தீ விபத்து: மூன்று இலங்கையர்கள் மீட்பு

மாலேயில் உள்ள கராஜ் ஒன்றில் தீ விபத்து: மூன்று இலங்கையர்கள் மீட்பு

மாலைதீவின் மாலேயில் உள்ள வாகனப் பழுதுபார்த்தல் கராஜ் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து மூன்று இலங்கையர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாலேயில் உள்ள வாகனப் பழுதுபார்த்தல் கராஜில் 2022 நவம்பர் 10ஆந் திகதி ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில்  இருந்து மூன்று இலங்கைப் பிரஜைகள் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று இலங்கையர்களும் மாலே, இஸ்கந்தர் மகுவில் உள்ள ஏ எஸ் எம் கராஜில் பணிபுரிந்து வருவதுடன், வாகனப் பழுதுபார்த்தல் கராஜ் கட்டிடத்தின் தரைத் தளத்தில் உள்ள தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2022 நவம்பர் 10ஆந் திகதி அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டபோது அவர்கள் காயங்கள் எதுவுமின்றி தப்பினர்.

வெளியேற்றப்பட்ட மூன்று இலங்கைப் பிரஜைகளையும் மாலேயில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் 2022  நவம்பர் 11ஆந் திகதி சந்தித்தனர். இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, இந்த மூன்று இலங்கைப் பிரஜைகளும் நல்ல ஆரோக்கியமாக இருப்பதுடன், அவர்களுக்குத் தேவையான போதுமான உணவு மற்றும் ஏனைய அனைத்து வசதிகளும் அவர்களது தொழில் தருனரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image