கொரிய தொழில்வாய்ப்புக்கான விண்ணப்பம் வழங்கல் ஆரம்பம்!

கொரிய தொழில்வாய்ப்புக்கான விண்ணப்பம் வழங்கல் ஆரம்பம்!
கொரியாவில் 1047 வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
நேற்று முன்தினம் 124 தொழிலாளர்கள் கொரிய வேலைகளுக்கு புறப்பட்டனர். உற்பத்தித் துறையில் வேலைக்காகப் புறப்பட்ட இந்தத் தொழிலாளர்கள் கொரிய வேலைகளுக்குப் புறப்படும் 732வது குழுவாகும்.
 
உற்பத்தித் துறையில் அதிகளவிலான தொழிலாளர்களை வேலைக்கு அனுப்ப முடியும் என்றாலும் கடந்த காலங்களில் மீன்பிடித் துறையில் வேலை வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.
 
கொரிய மனிதவளத் துறையின் இலங்கைக்கான பிரதானி லீயுடன் இது குறித்து ஆலோசித்தேன். இதன்படி, எதிர்காலத்தில் மீன்பிடித் துறையில் இலங்கைக்கு 1047 வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கான தேர்வுகள் ஒக்டோபரில் நடைபெறும், அதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணியும் தொடங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image