குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகத்தின் விசேட அறிவித்தல்

குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகத்தின் விசேட அறிவித்தல்

குவைத் நாட்டில் செல்லுபடியான வதிவிட வீசா (அகாமா) இன்றி தொழில் புரிவோரை இலங்கைக்கு மீள அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டு விதேஷ பலகாய எனும் முகப்புத்தக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு காணொளி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இக்காணொளிக்கும் தூதரகத்துக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என்பதனை அறியத்தருகிறோம்.

மேலும், குவைத் நாட்டில் செல்லுபடியான வதிவிட வீசா (அகாமா) இன்றி தொழில் புரிவோரை இலங்கைக்கு மீள அனுப்பும் நடவடிக்கைகளை தூதரகம் குவைத் அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

குறிப்பிடப்பட்டுள்ள காணொளியின் அடிப்படையில் செயற்பட்டு எதிர்காலத்தில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டால், அவர்கள் தொடர்பில் தூதரகம் எத்தகைய பொறுப்பும் ஏற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தூதரகம் – குவைத் 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image