சுற்றுலா விசாவில் சுமார் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகநபர் கைது

சுற்றுலா விசாவில் சுமார் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகநபர் கைது

சுற்றுலா விசாவில் சுமார் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகத்தின் பேரில் தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 'ஆள் கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்' சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த சந்தேக நபர் ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக இருந்து கொண்டு, சுற்றுலா விசாவில் ரஷ்யா செல்ல உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், நீதிமன்றில் நாளை (21) முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image