பாடசாலை விடுமுறை குறித்து ஆலோசனை

பாடசாலை விடுமுறை குறித்து ஆலோசனை

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாடசாலை விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்து பாடசாலை விடுமுறை தொடர்பான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சு கூறியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேசிய தேர்தல் ஆணைக்குழு கருத்து வெளியிடுகையில்,

வாக்கெண்ணும் நிலையங்களை தயார்படுத்தும் நடவடிக்கைகள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் தயார்படுத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வியமைச்சுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மூலம் - நியூஸ் ஃபெஸ்ட் 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image