பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி நிறைவு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி நிறைவு
பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பான தேசிய வேதன நிர்ணய சபை நேற்று கூடிய நிலையில், தீர்மானம் எதுவுமின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
இதன்போது, 1,350 ரூபாய் நாளாந்த அடிப்படை வேதனத்தை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கிய போதும், மேலதிக கொடுப்பனவுகளை வழங்க இணங்கவில்லை. 
 
அவ்வாறு 350 ரூபாய் மேலதிக கொடுப்பனவு வழங்குவதாயின், நாளாந்தம் நிர்ணயிக்கப்படுகின்ற கொழுந்து நிறைக்கு மேலதிகமாக 7 கிலோ பறிக்க வேண்டும் என்று நிபந்தனை முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
இதனை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் நிராகரித்ததுடன், தெளிவான இணக்கப்பாடு காணப்படாத நிலையில், எதிர்வரும் 10ஆம் திகதி மீண்டும் தேசிய வேதன நிர்ணய சபையைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மூலம் - சூரியன் FM செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image