பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக அஸ்வெசும கொடுப்பனவு முறைமையில் மாற்றம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக அஸ்வெசும கொடுப்பனவு முறைமையில் மாற்றம்!

பெருந்தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்காக அஸ்வெசும கொடுப்பனவுக்கான அளவுகோளைத் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்ததில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானம் கீழே

லயின் அறைகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்காக 'ஆறுதல்' (அஸ்வெசும) நலன்புரி நன்மைகளின் அளவுகோல்களை ஏற்புடையதாக்கிக் கொள்ளல்
 
நலன்புரி நன்மைகள் சபை தற்போது 'ஆறுதல்' நலன்புரி நன்மைத் திட்டத்தை அமுல்படுத்தி வரருகிறது. 2002 ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட 2022 ஆண்டின் 1  இலக்க நலன்புரி நன்மை கொடுப்பனவு (கொடுப்பனவை பெறுவதற்கு தகைமையான நபர்களைத் தெரிவு செய்தல்) ஒழங்குவிதிகளுக்கு அமைய திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
 
அந்த ஒழுங்குவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்யும் நபர்கள் அல்லது குடும்பங்கள் 'ஆறுதல்' நன்மைகளை பெறுவதற்கான உரித்தைப் பெறுவார்கள். பெருந்தோட்டத் துறையில் உள்ள தோட்டங்களில் தனி வீடுகள் இல்லாதிருப்பதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் தனிக் குடும்பங்கள் கூட்டாக ஒரே லயின் வீடுகளில் வசிக்கின்றனர். தற்போதைய நடைமுறைக்கமைய, குறித்த சந்தர்ப்பத்தில் வேறுவேறான குடும்ப எண்ணிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமல், லயின் அறைகளில் வாழ்கின்ற அனைத்து நபர்களும் ஒரு குடும்ப அலகாக கருதப்படுகின்றனர்.
 
குறித்த நலை மேற்குறித்த குடும்பங்களுக்கு பாதகமானது என்பது தெரியவருகிறது. எனவே, 2022 ஆண்டின் 1 இலக்க நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை (கொடுப்பனவுகளுக்குப் பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்தல்) கட்டளைகளின் பிரகாரம், 'ஆறுதல்' (அஸ்வெசும) முன்மொழிவுத் திட்டத்திற்கு தகைமைகளை நிர்ணயிக்கும் போது லயின் வீடுகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு செயலாற்றுமாறு நலன்புரி நன்மைகள் சபைக்கு உத்தரவிடுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image